What is Pray for Nation?

ஒருவருடைய தனிப்பட்ட வாழ்விலே கர்த்தருடைய அக்கினியை பற்ற வைப்பதன் மூலமாக தேசமெங்கும் அவ் அக்கினியை காட்டுத்தீயாக பரவசெய்வதே Pray for Nation.

2 தீமோத்தேயு 1:6 இன் படி,

“… உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.”

2

Who We Are?

தேசத்திலே ஜனங்கள் கிறிஸ்து இயேசுவை அறியவும்,  சமாதானமும் சந்தோஷமுமாக கர்த்தர் நமக்குத்தந்த தேசத்திலே வாழவும், தேசத்திலே எழுப்புதல் தீ பரவவும், தேசத்தின் ஆசீர்வாதங்களை தடுக்கும் சாபப் பிசாசினை கிறிஸ்து இயேசுவின் நாமத்தினால் துரத்தவும், இயேசு ஒருவரே தேவன் என்று தேசம் எங்கும் சொல்லவும், தேசத்திற்காக ஜெபிக்கின்ற கர்த்தருடைய சேனை.

Vision:

தேசத்திலே கர்த்தருடைய அக்கினியை பற்ற வைப்பது.

லூக்கா 12:49 இன் படி,

“பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.”

Mission:

கிறிஸ்தவ விசுவாசிகளுக்குள் தங்களுடைய வாழ்க்கையில் முதலிடத்தை கிறிஸ்து இயேசுவிற்கு கொடுப்பதன் மூலமாகவும், குடும்ப ஜெபங்களுக்கூடாகவும், தேவ பணிகள் ஊடாகவும், கர்த்தருடைய அக்கினியை கிறிஸ்து இயேசுவுக்குள் எவ்வளவு பற்ற வைக்கலாம் என்று கர்த்தருடைய வார்த்தைக்கூடாக போதித்தலும், அவர்களுக்காக ஜெபித்தலும், வழிநடத்தலும்.